24 671cda5d458de
இலங்கைசெய்திகள்

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! ரணில் சொன்ன பொய் – அம்பலப்படுத்தும் அநுர தரப்பு

Share

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! ரணில் சொன்ன பொய் – அம்பலப்படுத்தும் அநுர தரப்பு

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்திருந்தால் பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றிருப்பார் என்றுதான் கூற வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து வீட்டில் ஓய்வெடுப்பதற்குப் பதிலாக இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவது நகைப்புக்குரியது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பொய்யான அறிக்கைகளுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் (14) நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

நவம்பர் 14இற்குப் பிறகு நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க தேசிய மக்கள் சக்தி 25 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் 25 பிரதி அமைச்சர்களைக் கொண்ட வலுவான அரசாங்கத்தை நியமிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...