13 10
உலகம்செய்திகள்

தென்கொரியா ஜனாதிபதிக்கு வெளிநாடு செல்ல தடை

Share

தென்கொரியா ஜனாதிபதிக்கு வெளிநாடு செல்ல தடை

தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (yoon suk yeol) வெளிநாடுகளிற்கு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊழல் விசாரணை பணியகத்தின் பிரதான தலைமை வழக்குரைஞர் இதனை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரியாவின் (south Korea) ஜனாதிபதி யூன் சுக், கடந்த வாரம் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவித்திருந்தார்.

எனவே, இது தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 03ஆம் திகதி இரவு தொலைக்காட்சியில் தோன்றி, அவசர இராணுவ சட்டத்தை அறிவித்த யூன் சாக் யோல், சில மணி நேரத்தில், அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றார்.

அதன்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த இராணுவ சட்ட நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அவருக்கு வெளிநாடுகளிற்கு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...