15 7
இலங்கைசெய்திகள்

தமிழ் பிரதிநிதிகள் பிரிந்து நின்றதால் ஏற்பட்ட விளைவு : தேர்தல் முடிவை எடுத்துக்காட்டும் முக்கியஸ்தர்

Share

தமிழ் பிரதிநிதிகள் பிரிந்து நின்றதால் ஏற்பட்ட விளைவு : தேர்தல் முடிவை எடுத்துக்காட்டும் முக்கியஸ்தர்

தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு கூட்டம் வவுனியா (vavuniya)இரண்டாம்குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று(07) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்ததேர்தலில் நாங்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் அதில் ஏற்ப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக பேசியிருக்கிறோம். குறிப்பாக எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசியத்தை பாதுகாக்கும் முகமாக தமிழ்தரப்பில் இருக்கக்கூடிய அனைவரும் ஒருமித்து பயணிப்பது தொடர்பான விடயங்கள் இன்று கலந்தாலோசிக்கப்பட்டது.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தென்னிலங்கையின் அலை பெரிதாக வீசப்பட்டு எமது இளைஞர்கள் அள்ளுண்டு போனதை நாங்கள் அவதானித்திருக்கிறோம். தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துகின்ற வாக்குகள் கணிசமானஅளவு வழங்கப்பட்டிருந்தாலும் எங்களது கட்சிகளுக்கிடையில் இருந்த பிரிவினைகள் தென்னிலங்கை கட்சிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அது அந்தகட்சிக்கு அதிக ஆசனங்களை பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.

ஆகவே பிரிந்துநின்று பிரிவினையுடன் பயணிப்பது எமது இனத்தினுடைய இருப்பிற்கும் எதிர்கால தமிழ்த்தேசிய அரசியலுக்கும் பாதகமான சூழலை ஏற்ப்படுத்தும். அதனை இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் உணர்ந்துள்ளோம். இதனை சீர்செய்துகொண்டு தமிழ்த்தேசியப் பரப்பிலே பயணிக்கின்ற அனைவரையும் ஒருமித்துக்கொண்டு பயணிப்பது பற்றி கலந்துரையாடி இருக்கிறோம்.

இது தொடர்பாக மாவட்டரீதியாகவும் எமது கட்சி உறுப்பினர்களோடு பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். இன்னும் பலமான வகையில் மீள்கட்டுமானத்தினை செய்து எமது அரசியலை முன்னெடுக்க தயாராகஉள்ளோம். அத்துடன் கட்சிக்குள் நடந்த பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ரீதியகாவும் கூட்டங்களை நடாத்தி அவற்றை ஆராய்வதாக தீர்மானித்துள்ளோம் என்றார்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...