17 4
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகளுக்கு அநுர தரப்பு பதிலடி

Share

எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகளுக்கு அநுர தரப்பு பதிலடி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினதும் செலவுத் தொகை ஒரே மாதிரியானவை என எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆளும் தரப்பு பதில் வழங்கியுள்ளது.

உலக உணவுத் திட்டத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்ட 1300 மில்லியன் டொலர்கள் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படுவதால் ஜனாதிபதியின் தொகை ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவு திட்டதின் தொகைக்கு சமமாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர (Lakmali Hemachandra) இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெளிவு படுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் தனிப்பட்ட ஊழியர்களுக்கான செலவு அறுபத்து நான்கு வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஜனாதிபதியின் செலவிற்காக வரவு செலவுத் திட்டத்தில் ரணில் ஒதுக்கிய அதே தொகையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒதுக்கியுள்ளதாக கேகாலை மாவட்ட சபை உறுப்பினர் கபீர் ஹாசிம் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...