24 3
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹிருணிகா

Share

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு (Hirunika Premachandra) எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவானது இன்றையதினம் (04.12.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

கல்கிஸ்ஸ நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பாக, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்தினை மீளப் பெறுவதாகவும், இனிமேல் அவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போவதில்லை என ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 683beddc44bb5
இலங்கைசெய்திகள்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு..

ஜூன் மாதத்தில் தங்களது எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்...

25 683bc7c6b9af4
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். முன்னாள்...

4
இலங்கைசெய்திகள்

இலங்கை வரும் ஐநாவின் உயர் அதிகாரி.. தொடர் அழுத்தத்தில் அநுர அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதம் அல்லது...

images
இலங்கைசெய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம்...