5.5
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் செயற்பாடு: மகிழ்ச்சியில் எதிரணி எம்.பி

Share

ஜனாதிபதி அநுரவின் செயற்பாடு: மகிழ்ச்சியில் எதிரணி எம்.பி

தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் எதனையும் பார்க்காமல் பேசிய விதம் மகிழ்ச்சியளிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை(kalutara) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன(rohitha abeygunawardena) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றையதினம்(03) நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனதுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கம் செல்ல வேண்டிய பயணம் சுமுகமானதாக இல்லை. இந்த அரசாங்கம் மிகவும் கடினமான பாதையில் உள்ளது. ஆட்சியைப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அரசின் நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஓரிரு வருடங்கள் கடக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.

நான் நினைக்கிறேன் யதார்த்தமான எதிர்க்கட்சியாக நாம் செயற்படுவோம் என்று.அரசாங்கம் செய்யும் அனைத்து நல்ல பணிகளுக்கும் எதிர்க்கட்சியாக இருந்து நாம் ஆதரவளிக்கவேண்டும். நாம் எமது பரம்பரை செயற்பாட்டை மாற்றியமைக்கவேண்டும்.மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...