23 2
இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் அநுர அரசு : குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர்

Share

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் அநுர அரசு : குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர்

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது நாடாளுமன்ற வார சபை அமர்வு இன்றையதினம் (03.12.2024) சபாநாயகர் அசோக ரங்வல (Ashoka Ranwala)தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாரு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து ரெிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக வேட்டையில் ஈடுபடுவது நியாயமா?

இவ்வளவு பெரிய ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகத் துறையிலிருந்து உங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது.

ஆனால் இந்த நேரத்தில் இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வேட்டையாடப்படுகிறார்கள்.

நீக்கப்படும் என்று கூறப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தை நிறுத்துங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உர மானிய விடயத்தில் இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரணிலின் பாதையில் பயணிக்காது தேர்தல் மேடையில் கூறியவற்றை நடைமுறைப்படுத்துமாறும் எதிர்கட்சி தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...