9 2
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு

Share

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு

நாட்டில் அஸ்வெசும பெறும் பெற்றோர்களது மற்றும் சிறுவர் இல்லங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த தீர்மானம் எதிர்வரும் பாடசாலை தவணையில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியின் பாதகமான விளைவுகளால், பாடசாலை மாணவர்களின் கல்வியில் கணிசமான எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், 55% பாடசாலை மாணவர்களின் கல்வியை அது மோசமாகப் பாதித்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த சதவீதம் கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் அதிகமாக உள்ளது.

இதேவேளை, 53.2% பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாடசாலை உபகரணங்கள் வாங்குவதை குறைத்துள்ளனர் என்பதுடன் 26.1% பாடசாலை உபகரணங்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

எனவே, பாடசாலை மாணவர்களின் கல்வியில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை குறைக்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை வழங்கவுள்ளார்.

அதன்படி, பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள், நிவாரணத் திட்டத்தில் சேர்க்கப்படாத அனாதைக் குழந்தைகள், விசேட தேவையுடைய தாய் அல்லது தந்தையைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், மற்றும் அனாதை இல்லங்களில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கான பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய 6,000 ரூபா உதவித்தொகையாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...