20 1
இலங்கைசெய்திகள்

பிரான்ஸ் நாடாளுமன்ற பிரதிநிக்கு எடுத்துரைக்கப்பட்ட ஈழத்தமிழரின் இன்றைய அரசியல் நிலைமை

Share

பிரான்ஸ் நாடாளுமன்ற பிரதிநிக்கு எடுத்துரைக்கப்பட்ட ஈழத்தமிழரின் இன்றைய அரசியல் நிலைமை

ஈழத்தமிழரின் இன்றைய அரசியல் நிலைமை தொடர்பிலும் தமது அரசியல் சமூக முன்னெடுப்புகளுக்கு உள்ள தடைகள் தொடர்பாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரான்ஸ் நாடாளுமன்ற பிரதிநி கார்லோஸ் மாட்டீன் பிலோங்கோவிற்கு எடுத்துரைத்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்போது, கார்லோஸ் பிலோங்கோ தனது உரையில், தனது தொகுதியில் உள்ள ஈழத்தமிழர்களோடு சிறுவயதில் இருந்து தான் பழகிவருவதால் அவர்களுடைய இன்றைய அரசியல் நிலமை தொடர்பாக தான் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன், நா.க.த.அரசாங்கம் முன்னெடுக்கும் போராட்ட வழிமுறைகள் தொடர்பாக குறிப்பாக சட்டப்போராட்ட முன்னைடுப்புகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

மேலும், தமிழர்களின் இன்றைய அரசியல் நிலமைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து விளக்குவதற்கு இருக்கின்ற தடைகள் பற்றி சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் விரிவாக விளக்கியுள்ளனர்.

இதேவேளை, விடுதலைப்புலிகள் மீதான தடை தம்முடைய சந்திப்புகள், அரசியல் கருத்துரைப்புகளுக்கு தடையாக இருப்பதனையும் தமது ஆர்ப்பாட்டங்கள், சந்திப்புகள் பிரச்சாரங்களின் போது தமது அடையாளத்தை வெளிப்படுத்தும் தமிழீழ தேசியக்கொடியை முன்னிறுத்த முடியாதிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்த LUTS அமைப்பினர் நாட்டுக்கு நாடு தடைகள் வேறுபட்டிருப்பதையும், தமது நாட்டில் ஒரளவு தளர்வு இருப்பதையும் எடுத்துக் கூறியுள்ளனர்.

மேலும், அதன் போது சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற சாருகா தேவகுமார் தமிழர்களுக்கான மாறுகால நீதிபற்றியும், அது தொடர்பாக மேற்கொள்ளும் ஆய்வுகள் பற்றியும் விளக்கமளித்துள்ளார்.

சந்திப்பில் கலந்துகொண்ட சட்டவாளர் எய்சே சூய்டி சிறிலங்கா அரசிடம் இருந்து நீதியையோ,தீர்வுகளையோ பெற்றுக்கொள்ள முடியாது என வேறு நாடுகளின் ஆதாரங்களோடு எடுத்து விளக்கியுள்ளார்.

இந்த உரைகளையும் கேள்விகளையும் செவிமடுத்த கார்லோஸ் பிலோங்கோ அவர்கள் தமிழர்களின் அரசியல் நிலமைகளை தமது கட்சியினருக்கு எடுத்து விளக்கி, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதாக கூறியிருந்தார்.

இறுதியாக இளையோர்கள் தம்மை சிறிலங்கா என அழைக்காது, தமிழர் என அழைக்குமாறும் அவரிடம் கோரியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...