22
இலங்கைசெய்திகள்

புதிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

Share

புதிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வதில் உள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங் பிரதிநிதிகள் குழுவிற்கும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனாரத்னவிற்கும் (Madhura Senarathna) இடையில் இடம்பெற்றுள்ளது.

அங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது உச்ச நீதிமன்றத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி செயற்பட வேண்டுமென இரு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, போட்டிப் பரீட்சை நடத்தி ஆட்சேர்ப்பு நடத்த வேண்டும் என்றும் அதிகபட்சமாக 45 வயது வரை வயது வரம்பைக் கருத்தில் கொள்ளலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உரிய தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை வேறு அரச அலுவலகங்களுக்கு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, குறித்த பிரச்சினைகளை மிக விரைவாக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...