2 40
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் வழமைப் போலவே வழங்கப்படும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷாணி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையில் எவ்வித சலுகைக் குறைப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினருக்கான வீடுகளை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட சுமார் 25 – 30 வீடுகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்காலத்தில் இந்த வீடுகள் முன்னுரிமையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

மொத்தமுள்ள 108 வீடுகளில் ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கு 80 வீடுகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு 28 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...