1 67
இலங்கைசெய்திகள்

வாகன இலக்கத் தகடுகள் குறித்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Share

வாகன இலக்கத் தகடுகள் குறித்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு பணம் செலுத்தி இன்னும் அதைப் பெறவில்லையென்றால், 2024 டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் இலக்கத் தகடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு திணைக்களம் கோரியுள்ளது.

டிசம்பர் 15 இற்கு பின்னர், தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வீதிகளில் வாகனங்கள் ஓட்ட முடியாது எனவும் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்காலிக இலக்கத் தகடுகளுடன் வாகனம் ஓட்டுவதற்கு இதுவரை வழங்கப்பட்ட அனுமதி, இந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி அன்று இரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....