4 49
சினிமாசெய்திகள்

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

Share

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

கோமாளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 2022ல் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்த படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து, கதாநாயகனாக நடிக்க தொடங்கி விட்டார்.

தற்போது, இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் Love Insurance Kompany மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தி ஈஸ்வரன் இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

தற்போது, இந்த தகவல் குறித்து கூடுதல் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, பிரதீப் நடிக்கப்போகும் அடுத்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தயாரிப்பு நிறுவனம் தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகிறது. தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் குட் பேட் அக்லீ படத்தையும் மைத்ரி மூவி நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....