4 50
சினிமாசெய்திகள்

கோமாளி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஜெயம் ரவி இல்லையா..! வேறு யார் தெரியுமா

Share

கோமாளி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஜெயம் ரவி இல்லையா..! வேறு யார் தெரியுமா

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் 2019ல் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி.

இப்படத்தை பிரபல இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். அறிமுக படத்திலேயே தனது வெற்றியை பதித்து, தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்டார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு, ஆர்.ஜே. ஆனந்தி என பலரும் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ஜெயம் ரவி கிடையாதாம். ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் விருப்பப்பட்டு, அவரிடமும் கூறியுள்ளார். ஆனால், ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தை நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து காரணத்தை கூறிய ஆர்.ஜே. பாலாஜி, “இவ்வளவு பெரிய படத்தில் நான் ஹீரோவாக நடித்தால், கண்டிப்பாக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் நான் ஒரு படத்தில் கூட ஹீரோவாக நடிக்கவில்லை” என்றும், அதனால் தான் கோமாளி பட வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...