14 21
உலகம்செய்திகள்

ஹிஸ்புல்லாவின் 250 ரொக்கெட் தாக்குதல் : நிலைதடுமாறிய இஸ்ரேல்

Share

ஹிஸ்புல்லாவின் 250 ரொக்கெட் தாக்குதல் : நிலைதடுமாறிய இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) மீது ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் 250-க்கும் மேற்பட்ட ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு ஹமாஸ் (Hamas) அமைப்பினர் அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 117 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் கடந்த 13 மாதமாக பலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று (24.11.2024) ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஒரே நாளில் இஸ்ரேல் மீது 250-க்கும் மேற்பட்ட ரொக்கெட்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....