24 6742d0282d75e
இலங்கைசெய்திகள்

திசைகாட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் பெறப்போவதில்லை

Share

திசைகாட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் பெறப்போவதில்லை

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சம்பளம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே(Ratna Gamage) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் சம்பளம் பெற்றுக்கொண்டு சேவையாற்றுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் பொதுநிதியில் வைப்பிலிடப்படும் என தெரிவித்துள்ளார்.

அக்மீமமன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

159 பேரும் சம்பளம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு சுமையாகாத வகையில் சேவையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...