7 42
உலகம்செய்திகள்

ரஷ்யாவை எச்சரித்த பிரித்தானிய இராணுவம்

Share

ரஷ்யாவை எச்சரித்த பிரித்தானிய இராணுவம்

ரஷ்யாவின் இராணுவம் ஐரோப்பாவிற்குள் நுழைந்தால் அவர்களுக்கு எதிராக பிரித்தானிய இராணுவம் களமிறங்கும் என அந்நாட்டின் பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர் ரொப் மகோவன் (Rob Magowan) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகள் தங்களது ஆயுதங்களை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, போர் நிலைமை தீவிரமடைந்துள்ளது.

மேற்கத்தைய ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைனால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்தியிருந்தது.

அத்துடன், உக்ரைனுக்கு உதவ முன்வரும் மேற்கத்தைய நாடுகளையும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்திருந்தார்.

இந்நிலையிலேயே, புடினின் படைகள் ஐரோப்பிய நிலப்பரப்பை ஆக்கிரமித்தால் அவர்களை தடுப்பதற்கு பிரித்தானிய இராணுவம் களமிறங்கும் என ரொப் மகோவன் எச்சரித்துள்ளார்.

மேலும், பிரித்தானிய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு எந்நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...