18 13
ஏனையவை

ஈஸ்டர் தாக்குதல்: அரசியல் கட்சி தலைவரும் முன்னாள் படைத்தளபதியும் விரைவில் கைது..!

Share

ஈஸ்டர் தாக்குதல்: அரசியல் கட்சி தலைவரும் முன்னாள் படைத்தளபதியும் விரைவில் கைது..!

ஈஸ்டர் தாக்குதல்(easter attack) தொடர்பாக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின்படி, முன்னாள் படைத் தளபதி மற்றும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அண்மையில் சனல் 4 ஊடாக வெளிப்படுத்திய ஹன்சீர் ஆசாத் மௌலானாவிடம், அது தொடர்பான மேலதிக விபரங்களை ‘ஜூம்’ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சாட்சியங்களைப் பெற்று, நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் மேலும் தெரியவந்துள்ளது.

சனல் 4 நிகழ்ச்சி குறித்து, முன்னாள் அரசாங்கத்தால் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஐ. ஜனாப் இமாம் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசேட அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்குமாறு ஆசாத் மௌலானா கோரப்பட்டிருந்ததுடன், தற்போது வெளிநாட்டில் உள்ள அவர் விசாரணையில் பங்கேற்கவில்லை.

 

Share
தொடர்புடையது
images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும்...

images 4
ஏனையவை

தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்: 22 மாவட்டங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள்...

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...