1 44
ஏனையவை

மக்களின் காவலனாக இருப்பேன் : கோடீஸ்வரன் உறுதி

Share

மக்களின் காவலனாக இருப்பேன் : கோடீஸ்வரன் உறுதி

வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக இருப்பேன் என அம்பாறை (Ampara) மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கவிந்திரன் கோடீஸ்வரன் (Kaveendiran Kodeeswaran) தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதியாக தெரிவாகிய பின்னர் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று (15) இரவு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு கருத்து வெளியிட்ட அவர், ”அம்பாறை மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதியாக இலங்கைத் தமிழசு கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான என்னை தெரிவு செய்த மக்களுக்கு நன்றிகள்.

நாடாளுமன்ற தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு பெரும் பாடுபட்டுள்ளதை நான் அறிவேன்.

இந்தத் தேர்தல் பிரசாரத்துக்கு மக்கள் வழங்கிய பேராதரவுக்கு மிக்க நன்றிகள். எனவே வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக நான் தொடர்ந்தும் இருப்பேன்” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...