1 44
ஏனையவை

மக்களின் காவலனாக இருப்பேன் : கோடீஸ்வரன் உறுதி

Share

மக்களின் காவலனாக இருப்பேன் : கோடீஸ்வரன் உறுதி

வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக இருப்பேன் என அம்பாறை (Ampara) மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கவிந்திரன் கோடீஸ்வரன் (Kaveendiran Kodeeswaran) தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதியாக தெரிவாகிய பின்னர் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று (15) இரவு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு கருத்து வெளியிட்ட அவர், ”அம்பாறை மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதியாக இலங்கைத் தமிழசு கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான என்னை தெரிவு செய்த மக்களுக்கு நன்றிகள்.

நாடாளுமன்ற தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு பெரும் பாடுபட்டுள்ளதை நான் அறிவேன்.

இந்தத் தேர்தல் பிரசாரத்துக்கு மக்கள் வழங்கிய பேராதரவுக்கு மிக்க நன்றிகள். எனவே வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக நான் தொடர்ந்தும் இருப்பேன்” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

Easter Sunday attacks
ஏனையவை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்குள்ளான சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் (Easter...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...