15 6
இலங்கைசெய்திகள்

ஐ.எம்.எப் இன் கடனுதவி குறித்து அநுர அரசாங்கத்தை சாடிய மனுஷ

Share

ஐ.எம்.எப் இன் கடனுதவி குறித்து அநுர அரசாங்கத்தை சாடிய மனுஷ

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மூன்றாவது கடனுதவி தற்போது கிடைத்திருக்கும் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினாலும் சர்வதேச நாணய நிதியத்தின் தவணை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றது. மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் கொண்டு வரப்படும் இந்த அரசியலமைப்பு இன, மத நிலையை மாற்ற முயற்சிக்குமா என்பது சந்தேகமே.

ஐ.எம்.எப் கடன் தவணை அடுத்த வாரம் நிறைவேற்றப்படாது. ஆனால் அதன் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வர உள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கம் நாடு மீண்டும் திவாலாகும் வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் தேர்தல் வெற்றிக்கான முடிவுகளையே எடுத்துள்ளனர்.

அதனால்தான் வரவு – செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தாமல் தேர்தல் நடத்தப்படுவதோடு, அவர்கள் தங்கள் எதிர்கால நிகழ்ச்சி நிரலில் வரவு – செலவுத் திட்டத்தை முன்மொழிந்திருந்தால், சர்வதேச நாணய நிதியம் குறித்த நிகழ்ச்சி நிரலைப் பார்த்து முடிவுகளை எடுத்திருக்கும் என்றும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம்: வீடு சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு ரூ. 25,000 ஆக உயர்வு!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது, அவற்றைத் சுத்தம்...

MediaFile
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது: டிசம்பர் 16 வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (டிச 2) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை...

1654603198 litro gas distribution
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு: கட்டம் கட்டமாக விநியோகம்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG Cylinders) கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்...

25 692c8763b7367
செய்திகள்இலங்கை

இலங்கையில் அனர்த்த உயிரிழப்புகள் 465 ஆக அதிகரிப்பு; 366 பேர் காணாமல் போயினர் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக...