7 16
இலங்கைசெய்திகள்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அளித்துள்ள உறுதிமொழி

Share

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அளித்துள்ள உறுதிமொழி

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல் சக்தி தேசிய மக்கள் சக்திதான் என்றும் அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டம் வவுனியா நகரசபை விளையாட்டுமைதானத்தில் இடம்பெற்றது.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், எமது நாடு எல்லா வகையிலும் பிளவுபட்டுள்ளது, இந்த பிளவுகளால் எமது நாடு முன்னோக்கி செல்ல முடியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் பிளவுபட்ட யுகம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

ஜனாதிபதி தேர்தலின் போது நாம் பலமான இயக்கம் என்பது வடக்கு மக்களுக்கு தெரியாது. அதனால் தான் பழைய அரசியல் கட்சியையே தெரிவு செய்தனர்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அதிகமான வேலைகளை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக தேசிய மக்கள் சக்தி கொண்ட அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.

அனைத்து மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசியல் இயக்கமாக ஒன்றிணைவதன் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...