9 13
இலங்கைசெய்திகள்

நிவாரணத்திற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகம்: அநுரவை கடுமையாக சாடிய சஜித்

Share

நிவாரணத்திற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகம்: அநுரவை கடுமையாக சாடிய சஜித்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகத்தை உருவாக்கி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்தோடு, தற்போதைய ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறினாலும், தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறவில்லை என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததும் வரிச்சுமை குறைப்பு, எண்ணெய் விலை குறைப்பு, மின்சார கட்டணம் குறைப்பு மற்றும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கூறியதாகவும், ஆனால் இன்று அதில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மீண்டும் வரிசையில் நிற்கும் யுகம் உருவாகியுள்ளதாகவும், கடவுச்சீட்டு வரிசை கூட குறையவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...