9 13
இலங்கைசெய்திகள்

நிவாரணத்திற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகம்: அநுரவை கடுமையாக சாடிய சஜித்

Share

நிவாரணத்திற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகம்: அநுரவை கடுமையாக சாடிய சஜித்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகத்தை உருவாக்கி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்தோடு, தற்போதைய ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறினாலும், தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறவில்லை என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததும் வரிச்சுமை குறைப்பு, எண்ணெய் விலை குறைப்பு, மின்சார கட்டணம் குறைப்பு மற்றும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கூறியதாகவும், ஆனால் இன்று அதில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மீண்டும் வரிசையில் நிற்கும் யுகம் உருவாகியுள்ளதாகவும், கடவுச்சீட்டு வரிசை கூட குறையவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...