15 3
உலகம்செய்திகள்

சவூதி அரேபியாவில் முதன் முறையாக தோன்றிய பனிப்பொழிவு..!

Share

சவூதி அரேபியாவில் முதன் முறையாக தோன்றிய பனிப்பொழிவு..!

சவூதி அரேபியாவின் (Saudi Arabia) அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் காணொளிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

இவ்வாறான வறண்ட பாலைவன நிலப்பரப்பில் இந்த நிகழ்வுகள் ஏற்படுவது அதிசயமாகப் பார்க்கப்படுகின்றது.

எனினும், அரபிக் கடலிலிருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிப்பொழிவிற்குக் காரணம் என சவூதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் கடுமையான வானிலை நிலவும் என்றும் பலத்த மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

இந்த வானிலை காரணமாக வாகன சாரதிகள் சிரமத்திற்கு ஆளாகலாம் என்றும் மக்கள் கவனத்துடன் செயற்படுமாறும் தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...