5 13
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்திற்கு பாடம் எடுக்க தயாராகும் ரணில்!

Share

அநுர அரசாங்கத்திற்கு பாடம் எடுக்க தயாராகும் ரணில்!

எதிர்ப்பாளர்கள் தம்மை அழைக்கும் பெயர்களை விமர்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), அரசாங்கத்தின் நிதியை எவ்வாறு கையாள்வது என்று தெரியாவிட்டால் அநுர அரசாங்கத்தை தாத்தாவிடம் வந்து கேட்டு தெரிந்து கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

காலியில் நேற்றையதினம் (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, “அரசாங்கத்தில் இருப்பவர்கள் அரசாங்க நிதியை கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அரச ஊழியர்களின் சம்பளத்தை இரண்டு கட்டங்களாக அதிகரிக்க உதய செனவிரத்ன குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைபடுத்த வேண்டும்.

செலுத்தும் வரிக்கான வரம்பை ரூ.150,000 ஆக உயர்த்தி பின்னர் அதை மேலும் ரூ.200,000 ஆக உயர்த்துவதற்கான ஒப்பந்தத்துடன் அது முன்னேற வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலின் மிக முக்கியமான அம்சம் பொருளாதாரம், நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.

தற்போது அதனை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது குறித்து ஜனாதிபதி தெரிவிக்க வேண்டும், அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்படுமா என்பதையும் அவரே சொல்ல வேண்டும்.” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...