16 6
இலங்கைசெய்திகள்

அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்பட வாய்ப்பு

Share

அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்பட வாய்ப்பு

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 5000 மருந்தகங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்வதற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்கு அனுப்பப்பட்ட பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருந்தகங்களுக்கு சுமார் பத்தாயிரம் மருந்தாளர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது நாடளாவிய ரீதியில் ஆறாயிரம் மருந்தாளுநர்கள் மாத்திரமே உள்ளனர்.

இந்நிலையில், மருந்தக உரிமையாளர்கள் ஒரு மருந்தாளுநரிடம் பதிவுசெய்து, பயிற்சி பெற்ற மருந்தாளுநர்களுடன் சேர்ந்து மருந்தகங்கள் மூலம் தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள்.

இருப்பினும், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை அவசர தீர்மானமொன்றை எடுத்து வருடாந்த உரிமம் புதுப்பித்தலின் போது மருந்தாளுநர்கள் இல்லை எனக் கூறி விண்ணப்பங்களை நிராகரிக்க ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு 5ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், மருந்தாளுநர்கள் பற்றாக்குறை இருந்த போதிலும், தேவை பூர்த்தியாகும் வரை உரிமங்களை புதுப்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதற்கிடையில், மருத்துவ அதிகாரிகளால் மருந்தகங்களை ஆய்வு செய்யும் அல்லது உரிமங்களை பரிந்துரைக்கும் திட்டத்தை ஒக்டோபர் 10ஆம் திகதி தொடங்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 207
செய்திகள்இலங்கை

புத்தாண்டு விடுமுறை சோகம்: 4 நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் வகையில் நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில், கடந்த ஏப்ரல் 12...

world 206
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மல்லாவியில் இரு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்: மத போதகர் உள்ளிட்ட மூவர் அதிரடி கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் இரு யுவதிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில்...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...