6 11
உலகம்செய்திகள்

கனடா இந்தியா பிரச்சினையை தீர்த்துவைக்க ட்ரம்ப் உதவுவார்: இந்திய வம்சாவளி தலைவர் நம்பிக்கை

Share

கனடா இந்தியா பிரச்சினையை தீர்த்துவைக்க ட்ரம்ப் உதவுவார்: இந்திய வம்சாவளி தலைவர் நம்பிக்கை

கனடா இந்தியாவுக்கிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க அமெரிக்க ஜனாதிபதியாகிய ட்ரம்ப் உதவுவார் என இந்திய வம்சாவளி தலைவர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அமெரிக்க சமுதாயத்தின் முன்னணி தலைவரான சுதிர் பாரிக் என்பவர், 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்புக்கு இந்திய அமெரிக்க சமுதாயத்தின் ஆதரவு குறித்து பேசிய சுதிர், கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க கனடா உதவ முடியும் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

சமீபத்தில் கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தாங்கள் ட்ரம்புடன் விவாதித்ததாகவும், தான் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டால் கனடா அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்த்துவைக்க உதவுவதாக அவர் தெரிவித்ததாகவும் சுதிர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில், வர்த்தகம், கலாச்சாரப் பரிமாற்றம், மாணவர் பரிமாற்றம், இரு நாடுகளிலும் மற்ற நாட்டவர்கள் வாழ்தல் என முக்கிய விடயங்கள் உள்ளன என்பதால், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சினைகள் தூதரக ரீதியில்தான் தீர்த்துவைக்கப்படவேண்டும் என்றும் குறிப்பி

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...