உலகம்செய்திகள்

பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகளை கைது செய்த இஸ்ரேல் பொலிசார்: உருவாகியுள்ள உரசல்

4 10
Share

பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகளை கைது செய்த இஸ்ரேல் பொலிசார்: உருவாகியுள்ள உரசல்

பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை ஆயுதம் தாங்கிய இஸ்ரேல் பொலிசார் கைது செய்துள்ள விடயம் இருதரப்புக்கும் இடையில் உரசலை உருவாக்கியுள்ளது.

ஜெருசலேமில், பிரான்சுக்கு சொந்தமான Church of the Pater Noster என்னும் தேவாலயம் ஒன்று உள்ளது. 150 ஆண்டுகளாக அந்த தேவாலயம் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், காசா போர் நிறுத்தம் மற்றும் லெபனான் பிரச்சினைக்கு தூதரக ரீதியில் தீர்வு காணுதல் ஆகிய விடயங்களுக்காக இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட் (Jean-Noël Barrot) இஸ்ரேல் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து, நேற்று, பாரட் அந்த தேவாலயத்துக்கு செல்வதாக இருந்தது. ஆனால், ஆயுதம் தாங்கிய இஸ்ரேல் பொலிசார், அந்த தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இரண்டு பேரையும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

அமைச்சர் பாரட் தலையிட்டபிறகே அந்த தூதரக அதிகாரிகள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த தேவாலயத்துக்குச் செல்லும் திட்டத்தையே ரத்து செய்துவிட்டார் பாரட்.

இந்த சம்பவம் இருதரப்புக்கும் இடையே உரசலை உருவாக்கியுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து அமைச்சர் பாரட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பிரான்சுக்கான இஸ்ரேல் தூதருக்கும் சம்மன் அனுப்ப உள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....