2 10
உலகம்செய்திகள்

தமிழ்நாட்டை தவிர அனைத்து இடங்களிலும் ட்ரம்ப் தான்.., வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

Share

தமிழ்நாட்டை தவிர அனைத்து இடங்களிலும் ட்ரம்ப் தான்.., வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்ற நிலையில் சுவாரஸ்யமான தகவல் வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில், டொனால்டு ட்ரம்ப் அமோகமாக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள பலரும் கூகுளில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்பை தேடி வந்தனர். இதில் தான் ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது.

ஒக்டோபர் 31 -ம் திகதி முதல் நவம்பர் 6 -ம் திகதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் டொனால்டு டிரம்பை அதிகமானோர் கூகுளில் தேடியுள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அதிகமானோர் தேடியுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். அவர், தமிழ்நாடு மாவட்டமான திருவாரூர் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தைப் பூர்வீகமாக கொண்டவர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவரின் மகன் வழிப் பேத்தி தான் கமலா ஹாரீஸ்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் தோல்வியை தழுவியது வருத்தம் அளிப்பதாக துளசேந்திரபுர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, தேர்தலில் கமலா ஹாரீஸ் வெற்றி பெற சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...