15 n
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

Share

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய(priyantha-weerasuriya) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரியந்த வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொது பாதுகாப்பு அமைச்சினால் இந்த மதிப்பீட்டு அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டாம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக சில தரப்புக்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பிலான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...