12 4
இலங்கைசெய்திகள்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

Share

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரிசியின் விலை தொடர்பில் அரிசி ஆலையாளர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொனராகலையில் (Moneragala) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாமைக் காரணமாக, அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் எந்த வழியும் இருக்கவில்லை.

எனவே அரசின் நெல் கையிருப்புகளை விடுவிப்பது அல்லது சட்டங்களை இயற்றுவதன் மூலமோ அரிசி விலையை கட்டுப்படுத்துவது என்பனவே அரசாங்கத்திடம் உள்ள இரண்டு தெரிவுகளாகும் என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அரசிடம் நெல் கையிருப்பு இல்லாததால் அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கையை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இதன்படி, எதிர்வரும் பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...