24 6726f9db25bb9
உலகம்செய்திகள்

இங்கிலாந்தில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் தடவையாக தலைமையை ஏற்றுள்ள கறுப்பின பெண்

Share

இங்கிலாந்தில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் தடவையாக தலைமையை ஏற்றுள்ள கறுப்பின பெண்

இங்கிலாந்தின் (England) கொன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக முதல் தடவையாக கறுப்பின பெண்ணான கெமி படேனோக் (Kemi Badenoch) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, 44 வயதான படேனொக் இங்கிலாந்தில் ஒரு மிக முக்கிய அரசியல் கட்சிக்கு தலைமை தாங்கும் முதல் கறுப்பினப் பெண்ணாகவும் கருதப்படுகிறார்.

முன்னாள் பிரதமர் ரிசி சுனக்குக்கு பதிலாக அவர் கட்சியின் தலைமையை ஏற்றுள்ளார். முன்னதாக கடந்த ஜூலை பொதுத் தேர்தலில், கொன்சவேட்டிவ் கட்சி வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருந்தது.

எனினும் கெமி படேனொக் தமது தொகுதியில் சக வலதுசாரி ரொபர்ட் ஜென்ரிக்கை, 12,418 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

இந்தநிலையில் கட்சியை விட்டு வெளியேறிய வாக்காளர்களை மீண்டும் வெற்றி கொண்டு கட்சிக்கு அழைத்து வரப்போவதாக கெமி படேனோக் உறுதியளித்துள்ளார்.

கடந்த 14 ஆண்டுகால அரசாங்கத்தில் கட்சி ரீதியாக தவறுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள கெமி படேனோக், எதிர்வரும் நாட்களில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளுக்காக நியமிக்கப்போகும் உறுப்பினர்கள் தொடர்பில் எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றன.

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்குள், குடியரசுக்கட்சியின் 6வது தலைவராக பதவியேற்றுள்ள படேனோக், பிளவுபட்ட கட்சியை ஒன்றிணைத்து, பிரதமர் ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடும் பணிகளை மேற்கொள்வார் என்று ஊடகங்கள் எதிர்வை வெளியிட்டுள்ளன.

இதேவேளை அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் சிறுபான்மையினரின் வாக்குகளை கவரும் வகையில் போட்டியிடுகின்ற அதேநேரம், இங்கிலாந்திலும் கறுப்பினப் பெண் முக்கிய கட்சி ஒன்றின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ளமை சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

இதற்கிடையில் கொன்சவேட்டிவ் கட்சியின் கறுப்பின தலைமையை இங்கிலாந்தின் நடப்பு பிரதமரும் வரவேற்றுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...