24 6726f9db25bb9
உலகம்செய்திகள்

இங்கிலாந்தில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் தடவையாக தலைமையை ஏற்றுள்ள கறுப்பின பெண்

Share

இங்கிலாந்தில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் தடவையாக தலைமையை ஏற்றுள்ள கறுப்பின பெண்

இங்கிலாந்தின் (England) கொன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக முதல் தடவையாக கறுப்பின பெண்ணான கெமி படேனோக் (Kemi Badenoch) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, 44 வயதான படேனொக் இங்கிலாந்தில் ஒரு மிக முக்கிய அரசியல் கட்சிக்கு தலைமை தாங்கும் முதல் கறுப்பினப் பெண்ணாகவும் கருதப்படுகிறார்.

முன்னாள் பிரதமர் ரிசி சுனக்குக்கு பதிலாக அவர் கட்சியின் தலைமையை ஏற்றுள்ளார். முன்னதாக கடந்த ஜூலை பொதுத் தேர்தலில், கொன்சவேட்டிவ் கட்சி வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருந்தது.

எனினும் கெமி படேனொக் தமது தொகுதியில் சக வலதுசாரி ரொபர்ட் ஜென்ரிக்கை, 12,418 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

இந்தநிலையில் கட்சியை விட்டு வெளியேறிய வாக்காளர்களை மீண்டும் வெற்றி கொண்டு கட்சிக்கு அழைத்து வரப்போவதாக கெமி படேனோக் உறுதியளித்துள்ளார்.

கடந்த 14 ஆண்டுகால அரசாங்கத்தில் கட்சி ரீதியாக தவறுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள கெமி படேனோக், எதிர்வரும் நாட்களில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளுக்காக நியமிக்கப்போகும் உறுப்பினர்கள் தொடர்பில் எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றன.

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்குள், குடியரசுக்கட்சியின் 6வது தலைவராக பதவியேற்றுள்ள படேனோக், பிளவுபட்ட கட்சியை ஒன்றிணைத்து, பிரதமர் ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடும் பணிகளை மேற்கொள்வார் என்று ஊடகங்கள் எதிர்வை வெளியிட்டுள்ளன.

இதேவேளை அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் சிறுபான்மையினரின் வாக்குகளை கவரும் வகையில் போட்டியிடுகின்ற அதேநேரம், இங்கிலாந்திலும் கறுப்பினப் பெண் முக்கிய கட்சி ஒன்றின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ளமை சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

இதற்கிடையில் கொன்சவேட்டிவ் கட்சியின் கறுப்பின தலைமையை இங்கிலாந்தின் நடப்பு பிரதமரும் வரவேற்றுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...