17 1
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஈரான்

Share

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஈரான்

தெஹ்ரான் மற்றும் பிராந்தியத்தில், தெஹ்ரானை ஆதரிக்கும் குழுக்களை குறிவைத்து இஸ்ரேலும் அதன் நட்பு நாடான அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei ) எச்சரித்துள்ளார்.

ஈரானிய (Iran) தேசத்துக்கு எதிராக அவர்கள் மேற்கொள்கின்ற செயற்பாடுகளுக்கு நிச்சயமாக பல்லை உடைக்கும் பதிலைப் பெறுவார்கள் என்று அவர் குறிப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பித்ததில் இருந்து பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில் 2024 அக்டோபர் 26 அன்று, இஸ்ரேல் தெஹ்ரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

முன்னதாக, ஈரான் ஆதரவு போராளி தலைவர்கள் மற்றும் ஒரு புரட்சிகர தளபதி ஆகியோர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்டோபர் 1ஆம் திகதியன்று ஈரான் நடத்திய தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாகவே இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியது.

இதன்போது ஈரானில் உள்ள இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களால், சில ரேடார் அமைப்புகளுக்கு வரையறுக்கப்பட்ட சேதம் ஏற்பட்டதாக கூறிய ஈரானிய ஊடகங்கள், குறைந்தது நான்கு படையினரும், ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தன.

Share
தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...