10 2
இலங்கைசெய்திகள்

கனடா செல்ல முயற்சித்த வவுனியா இரட்டை கொலை சந்தேகநபர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Share

கனடா செல்ல முயற்சித்த வவுனியா இரட்டை கொலை சந்தேகநபர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை எனக்கூறி சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி மனுதாக்கல் செய்ததையடுத்தே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் சம்பவத்தின் பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கனடாவிற்கு அனுப்பி வைத்ததாகவும் பிணை வழங்கப்பட்ட பின்னர் அவரும் கனடாவிற்கு தப்பிச்செல்ல இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்னும் சில சந்தேகநபர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொடூரமான கொலை சம்பவம் பிரதேச மக்களை அச்சமுற செய்ததாக தெரிவித்த நீதிபதி, சந்தேகநபர்களை 30.01.2025 வரையான காலப்பகுதிக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்இலங்கை

காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதல்: நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பு குறித்து விசாரணை!

இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் தொடர்பான...

14 3
செய்திகள்உலகம்

தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் ஊடுருவல்: கியாம் நகரில் தீவிர எறிகணைத் தாக்குதல்!

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனான் எல்லையைக் கடந்து தரைவழியாக முன்னேறி வருவதாக லெபனான் அரச ஊடகங்களை...

11 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போக்குவரத்துத் துறையை நவீனப்படுத்த ஜப்பான் உதவி: 8 நவீன பேருந்துகள் நன்கொடை!

இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து 8 தாழ்தளப்...

12 3
செய்திகள்இலங்கை

காலி கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிப்பு: கடல்சார் பாதுகாப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கேள்வி!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) அல்லது அதற்கு மிக அருகாமையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரானியப்...