20 20
உலகம்செய்திகள்

சமாதான உடன்படிக்கைகளை கைச்சாத்திட தயாராகும் நெதன்யாகு!

Share

சமாதான உடன்படிக்கைகளை கைச்சாத்திட தயாராகும் நெதன்யாகு!

காசாவுடனான போரை நிறைவுக்கு கொண்டுவந்தவுடன் அரபு நாடுகளுடன் சமாதான உடன்படிக்கைகளை கைச்சாத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.

 

இதன்மூலம் இஸ்ரேலின் மிகப் பெரிய எதிரியான ஈரானையும் வெற்றிகொள்ளமுடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இஸ்ரேலிய நாடாளுமன்றில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த நெதன்யாகு,

 

“இஸ்ரேல் வீழ்ந்தால் முழு மத்தியகிழக்கு ஈரானின் வசப்படும். இதனை இலக்காக கொண்டே ஈரானும் செயற்படுகிறது.

 

இதற்கமைய புதிய எதிர்கால இலக்கை இஸ்ரேல் அடையும் நோக்குடன் அரபு நாடுகளுடன் சமாதான உடன்படிக்கைகளைப் பின்பற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

மேலும், நான் வழிநடத்திய செயல்முறையைத் தொடரவும், கூடுதல் அரபு நாடுகளுடன் சமாதானத்தை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளேன்” என்றார்.

 

தற்போதைய சுற்று மோதலுக்கு முன், இஸ்ரேல் மத்திய கிழக்கில் உள்ள சில அரபு நாடுகளுடன் தனது உறவுகளை மீட்டெடுக்க தீவிர இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

இந்த ஒப்பந்தங்களின் நகர்வுகள் 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆபிரகாம் உடன்படிக்கைகள் மற்றும், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கையொப்பமிடப்பட்ட உயர்தர இயல்புநிலை ஒப்பந்தங்களை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...