18 22
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு என குழப்பத்தை ஏற்படுத்திய நபர்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு என குழப்பத்தை ஏற்படுத்திய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல், வாரியபொல பகுதியில் வைத்து 67 வயதான நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 27ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.

 

குறித்த நபரால் விமான நிலைய முகாமையாளருக்கும் விமான நிறுவனத்துக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த அழைப்பிற்கு பிறகு, விமான நிலைய செயல்பாடுகள் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் விமான நிலையமும் பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் விமானங்கள் தாமதமாகியதாக தெரியவந்துள்ளது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...