9 35
இலங்கைசெய்திகள்

அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை

Share

அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை

மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை நாட்டு மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அறுகம் குடாவில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த ஒரு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது.

புலனாய்வுப் பிரிவின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் அமெரிக்க தூதரகம் தமது பிரிவுகளுக்கு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொழும்பில் உள்ள தூதரகங்கள் சந்தேகம் கொண்டால் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபல்யமடைய வேண்டும் என்பதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் பாதுகாப்பு அலட்சிப்படுத்தப்பட்டுள்ளமை ஆரோக்கியமானதல்ல. நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதை பயங்கரவாதி சஹ்ரான் உட்பட்ட தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

விளைவு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலாக வெளிப்பட்டது. ஆகவே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேசிய பாதுகாப்பை பலவவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...