24 671ca17686b4e
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் தீவிர தாக்குதல்: ஈரான் வெளியிட்ட அறிக்கை

Share

இஸ்ரேலின் தீவிர தாக்குதல்: ஈரான் வெளியிட்ட அறிக்கை

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல்களளை தனது வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக எதிர்கொண்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் – தெஹ்ரான், குசெஸ்தான் மற்றும் இலாம் மாகாணங்களில் உள்ள இராணுவ இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாக ஈரானிய வான் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக கூறி, சனிக்கிழமை அதிகாலை ஈரானில் உள்ள இராணுவ தளங்களை இஸ்ரேல் தாக்கியிருந்தது.

இந்நிலையில், தாக்குதல் ஆரம்பித்து சில மணிநேரங்களுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் அதன் தாக்குதல்களை நிறுத்தியதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதியன்று இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தற்காப்புக்காக ஈரானிலுள்ள இராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் இராணுவம் தனது இலக்கை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அந்நாட்டின் இராணுவ தரப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஈரான் அரசு புதிய தாக்குதல்களை நடத்தி மோதல்களைப் பெரிதாக்க வேண்டுமென்று நினைத்தால் இஸ்ரேல் அதற்கு பதிலடி தர நேரிடும் எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...