6 39
சினிமாசெய்திகள்

மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த அதிரடி கூட்டணி.. எந்த படத்தில் தெரியுமா

Share

மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த அதிரடி கூட்டணி.. எந்த படத்தில் தெரியுமா

பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். சமூக நீதி குறித்து பேசப்படும் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்ட இவர் தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தை எடுத்தார்.

இப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து இவர் இயக்கிய திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் மாமன்னன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலும் ‘ரத்தினவேல்’ கதாபாத்திரத்தில் பகத் பாசிலும் நடித்து இருந்தனர்.

இதில், மாமன்னன் கதாபாத்திரத்தை விட பகத் பாசில் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு நடிகர் வடிவேலும், பகத் பாசிலும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

பிரபல மலையாள இயக்குனர் ஆர்.கிருஷ்னமூர்த்தி இயக்கும் ‘மாரீசன்’ என்ற படத்தில் தான் இவர்கள் இருவரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியுள்ளது.

மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பின் இவர்கள் இருவரும் நடிப்பதால் இந்த படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...