3 37
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை எரிபொருள்

Share

முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை எரிபொருள்

இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவிற்கு 3,250,000 ரூபாய் பெறுமதியான எரிபொருள் கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

இது 01.01.2023 முதல் 07.10.2024 வரை வழங்கப்பட்ட எரிபொருள் கூப்பன் பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் உரிமை சட்டத்திற்கமைய, மாதாந்தம் 1200 லீட்டர் டீசல் மற்றும் 750 லீட்டர் பெட்ரோல் பெறுவதற்கு உரிமை உண்டு.

 

மாதத்தின், முதல் நாளில் எரிபொருளின் சந்தை மதிப்பின் அடிப்படையில் அதிகபட்ச மதிப்பை மீறாத வகையில் சம்பந்தப்பட்ட காலத்தில் எரிபொருள் கூப்பன்கள் வழங்கப்படும்.

 

அதற்கமைய, கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் தற்போது வரை ஓய்வுபெற்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவிக்கு வழங்கப்பட்ட எரிபொருள் கூப்பன்களின் பெறுமதி 3,250,000 ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மற்றும் அவரது குடும்பங்களுக்கு வழங்கும் சலுகைகளை குறைக்கவுள்ளதாக சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...