28 14
இலங்கைசெய்திகள்

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

Share

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

பயங்கரவாத குழுக்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீண்டும் நாட்டில் நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஊடகங்களுக்கு நேற்று (23) கருத்து தெரிவித்துள்ள அவர், நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வருகிறது.

 

இந்தநிலையில் அச்சுறுத்தல்கள் தொடர்பான செய்திகள் நாட்டுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

 

எனவே தற்போதைய அரசாங்கம் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

முன்னைய தமது அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் புலனாய்வுப் பகிர்வு வலையமைப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்த வலையமைப்பின் ஊடாக முக்கியமான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

 

இதன் விளைவாக இலங்கை சமீப வருடங்களில் பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதுபோன்றே தற்போதைய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த அச்சுறுத்தல்கள் தோன்றியிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...