Connect with us

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை: சந்தேக நபராக பெயரிடப்பட்ட அநுரவின் சகா

Published

on

12 23

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் சந்தேக நபராக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன உள்வாங்கப்பட்டுள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் மூன்று அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து அது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

 

மேலும், சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்ட பி அறிக்கை தொடர்பான ஆவணங்களை ஊடகவியலாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட விதம் பிரச்சினைக்குரியது எனவும், தாக்குதல் தொடர்பான விசாரணையில் திருப்தி அடைய முடியாது எனவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதன்படி இந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

 

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.ரவி செனவிரத்னவின் கீழ் உயிர்த்த ஞாயிறுகுண்டுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஏற்றுக்கொள்ள முடியாதது என பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் சந்தேக நபராக அவர் பெயரிடப்பட்டுள்ளமையினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சட்டத்தரணி சஜித கமகே இது தொடர்பில் கோட்டை நீதவான் தனுஜா லக்மாலிக்கு அறிவித்துள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மூன்று ஆணைக்குழு அறிக்கைகளையும் வரவழைத்து விசாரணையில் தலையிடுமாறு சட்டத்தரணி நீதிமன்றிடம் கோரியுள்ளார்.

 

தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்ட பி அறிக்கை தொடர்பான ஆவணத்தை ஊடகவியலாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட விதம் பிரச்சினைக்குரியது எனவும் விசாரணையில் திருப்தி அடைய முடியாது எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தலையிடுமாறு விளக்கியுள்ளார்.

 

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

 

பிரேரணை ஒன்றை தாக்கல் செய்து இந்தக் கோரிக்கையை முன்வைத்த சட்டத்தரணி, தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கோரியுள்ளார்.

 

இந்த சம்பவத்தில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளவர் இதில் பொது பாதுகாப்பு செயலாளராக செயற்படுகின்றனர். இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க தமக்கு அதிகாரம் இல்லை எனவும் விசாரணையில் திருப்தி அடைய முடியாது எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், “இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் பொது ஊடகம் ஊடாக கருத்து வெளியிட்டுள்ளார். விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவார் என்றும் ஒரு நாளில் அந்த அதிகாரி பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுக்களின் நீதிபதிகளுக்கு எதிராக சில அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

 

இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது ஏற்புடையதல்ல. திறமையான நீதிபதிகள் இந்த அறிக்கைகளைத் தயாரித்தனர். இந்த அறிக்கை எப்படி சென்றது என்பதை ஆராயுங்கள்.

கைது செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கே உள்ளது. உயிரிழந்தவர்கள் சார்பாக இந்த கோரிக்கையை விடுக்கின்றேன்’’ என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

 

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உப சரத்து 52 (1) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன(ரவி செனவிரத்ன) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ரவி செனவிரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பில் முதுமாணிப் பட்டம் பெற்றவராவார்.

 

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான அவர், விசேட அதிரடிப் படையின் ஆரம்பகால உறுப்பினராகவும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளராகவும், தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் முதல் செயலாளராகவும், இன்டர்போல் இலங்கைக் கிளையின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்11 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 24 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 24.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 7, வியாழக் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் கேட்டை, மூலம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் : 23 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 23 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 23.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 6, புதன் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 22 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 22 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 5, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 21 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 21 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 21.10.2024 குரோதி வருடம் ஐப்பசி 4, திங்கட் கிழமை, சந்திரன் ரிஷப...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 20 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 20 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 20.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 3 ஞாயிற்று கிழமை, சந்திரன் ரிஷப...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 19 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 19 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 19.10. 2024, குரோதி வருடம் ஐப்பசி 2, சனிக் கிழமை, சந்திரன்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 18 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 18 அக்டோபர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (அக்டோபர் 18, 2024 வெள்ளிக் கிழமை) இன்று...