8 34
உலகம்செய்திகள்

ஆண்டுகளில் முதல் முறையாக… புலம்பெயர் மக்கள் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

Share

ஆண்டுகளில் முதல் முறையாக… புலம்பெயர் மக்கள் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

கடந்த பல வருடங்களில் முதன்முறையாக நாட்டுக்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா வெகுவாகக் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மக்களிடையே செல்வாக்கு சரிந்துவரும் நிலையில், ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் ட்ரூடோ அரசாங்கம் எடுக்கும் ஒரு முடிவாகவே இது பார்க்கப்படுகிறது.

 

மேலும், 2025ல் நிரந்தர வதிவிட அனுமதி 395,000 பேர்களுக்கும் 2026ல் 380,000 பேர்களுக்கும் 2027ல் 365,000 பேர்களுக்கும் என படிப்படியாக குறைக்க உள்ளது. 2024ல் இந்த எண்ணிக்கை 485,000 என இருப்பதாகவே அரசாங்க தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.

 

மட்டுமின்றி, தற்காலிக வதிவிட அனுமதி எண்ணிக்கையை 300,000ல் இருந்து 2025ல் 30,000 என தடாலடியாக குறைக்க உள்ளது. பொதுவாக புலம்பெயர் மக்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று.

 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புலம்பெயர் மக்கள் மீதான கனடாவின் அணுகல் சரிவடைந்து காணப்படுகிறது. பெரும்பாலும் இது அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

 

மேலும், கனடாவில் ஏற்பட்டுள்ள குடியிருப்பு பற்றாக்குறைக்கு காரணம் புலம்பெயர் மக்கள் என்றே பரவலாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மட்டுமின்றி, விலைவாசி உயர்வுக்கும், சுகாதார அமைப்புகள் அவநம்பிக்கையான நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் காரணம் புலம்பெயர் மக்கள் என்றே குறிப்பிட்ட கனேடிய மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

 

அக்டோபர், 2025க்குப் பிறகு பெடரல் தேர்தல் நடைபெறவுள்ளதால், கனேடிய அரசியலில் இந்தப் பிரச்சினை மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

 

மட்டுமின்றி, வெளிவரும் கருத்துக்கணிப்புகளில் கனேடிய மக்கள்தொகையில் புலம்பெயர் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...