6 36
இலங்கைசெய்திகள்

ரணில் ஆட்சியின் அமைச்சரவை தீர்மானம்: அநுர அரசுக்கு விசேட அறிவிப்பு

Share

ரணில் ஆட்சியின் அமைச்சரவை தீர்மானம்: அநுர அரசுக்கு விசேட அறிவிப்பு

அரச பணியாளர்களின்; சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த, அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

 

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க திட்டமிட்டிருந்ததாகவும், நடப்பு அரசாங்கம், சம்பள அதிகரிப்பை வழங்கப்படாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்குள்ளது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

அரச பணியாளர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அனைத்து அரச பணியாளர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து சம்பள அதிகரிப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என கூறியுள்ளார்.

 

தமது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்க, பொருளாதார ஆலோசகர் சமரதுங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோருடனும் கலந்துரையாடியே, இறுதியில் இந்த சம்பள உயர்வை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

அதன்படி அரச பணியாளர்களின்; சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவை ஆவணத்தில் ஜனாதிபதி என்ற முறையில் தாம் கையெழுத்திட்டுள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தநிலையில், அமைச்சர் விஜித ஹேரத் இதற்கு முன்னர் அமைச்சரவையில் இருந்ததாக நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் எடுத்த தீர்மானம் முற்றிலும் சட்டபூர்வமானது என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 3
செய்திகள்இந்தியா

டெல்லி வெடிப்புச் சம்பவம்: குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் தாக்குதல் நடத்த முக்கிய சந்தேக நபர்கள் திட்டம் – அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!

டெல்லியில் அண்மையில் நடந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைதான முக்கிய சந்தேக நபர்கள், எதிர்வரும் இந்தியக்...

Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...

17597546 bridge
செய்திகள்உலகம்

சீனாவில் திடீர் அதிர்ச்சி: சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது! – கட்டுமானத் தரம் குறித்துக் கேள்விகள்!

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி நேற்று...