25 14
உலகம்செய்திகள்

பணவீக்கத்துக்கு எதிரான போரில் வெற்றி! மத்திய கிழக்கு போரினால் அபாயம் – ஐஎம்எப்

Share

பணவீக்கத்துக்கு எதிரான போரில் வெற்றி! மத்திய கிழக்கு போரினால் அபாயம் – ஐஎம்எப்

உலகின் சில நாடுகளில் விலை அழுத்தங்கள் நீடித்தாலும், பணவீக்கத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பெருமளவு வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகரும் ஆராய்ச்சித் துறையின் இயக்குநருமான பியர் ஒலீவியர் கோலீஞ்சஸ்( Pierre-Olivier Gourinchas )இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் மொத்தப் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் குறையும் என்றும் அவர் எதிர்வை வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், பணவீக்கம் 9.4 சதவீதமாக உயர்ந்த நிலையிலேயே தற்போதைய சரிவு உணரப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இந்த பணவீக்கம் போக்கு 3.2 சதவீதமாக நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பணவீக்கம் பற்றிய நற்செய்தி இருந்தபோதிலும், எதிர்மறையான அபாயங்கள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய மோதல்களின் அதிகரிப்பு, குறிப்பாக மத்திய கிழக்கில், பொருட்களின் சந்தைகளுக்கு கடுமையான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...

18 4
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு நெருக்கடி: ₹11.9 லட்சம் கோடி வரியைத் திருப்பிச் செலுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடந்த ஆண்டு சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச்...

17 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு மோதல்: சவுதி மற்றும் ஓமன் விமான நிலையங்களில் 131 இலங்கையர்கள் தவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர்ச் சூழல் மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாக சவுதி...