6 35
இலங்கைஏனையவைசெய்திகள்

ரணிலையும் கம்மன்பிலவையும் சந்தேகிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

Share

ரணிலையும் கம்மன்பிலவையும் சந்தேகிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

குண்டுவெடிப்புக்கு முன்னர் குறிப்பிட்ட புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே அல்விஸ் தலைமையில் குழுவொன்றை இந்த வருட ஆரம்பத்தில் நியமித்ததன் பின்னணி குறித்து அவர் வினவியுள்ளார்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று நடந்த இந்த தாக்குதல் தொடர்பாக, முன்னைய அரச புலனாய்வு சேவை, தேசிய புலனாய்வுத்துறை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளின் நடவடிக்கைகளை விசாரிக்கவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரணில் விக்ரமசிங்க புதிய குழுவொன்றை நியமித்தமை சந்தேகத்திற்குரியது என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளான சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரை அரசியல் ரீதியாகப் பலிகடா ஆக்குவதற்காகவே அல்விஸ் தலைமையிலான குழுவை முன்னாள் ஜனாதிபதி நியமித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை கையாள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதாகத் தெரிகிறது என்றும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...