18 17
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னைய நிலைப்பாட்டில் இருந்து மாற்றம்

Share

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னைய நிலைப்பாட்டில் இருந்து மாற்றம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் முன்னைய நிலைப்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன விமர்சித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடும் ​போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை வைத்தார்கள்.

குறித்த ஆணைக்குழுக்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவழிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் அறிக்கை குறித்து அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு இருப்பதாக அப்போது அவர்கள் வாதிட்டார்கள்.

ஆனால், இப்போது அதிகாரத்துக்கு வந்தபிறகு குறித்த அறிக்கைகளை அவர்கள் தொடர்ந்தும் மறைத்து வைத்திருக்க விரும்புகின்றனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தொடர்பில் அந்த அறிக்கைகளி்ல் குற்றம் சாட்டப்பட்டிருப்பதன் காரணமாகவே அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளத் தலைப்படுவதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.

அதன் மூலம், தங்களுக்கு ஆதரவானவர்களை பாதுகாப்பதில் தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் அக்கறை கொண்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

எனவே, உண்மையான அவ்வாறான நிலைப்பாடுகளை விடுத்து, உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...