5 36
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எடுபிடி வேலை பார்த்த பொலிஸார் – அநுர அரசு கோபம்

Share

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எடுபிடி வேலை பார்த்த பொலிஸார் – அநுர அரசு கோபம்

முன்னாள் ஜனாதிபதிகளின் மெய்ப்பாதுகாவலர்கள் பலர் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது பொலிஸ் அதிகாரிகளை அவமதிக்கும் செயலாகும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத், தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சில முன்னாள் ஜனாதிபதிகள் 163 மெய்ப்பாதுகாவலர்களை கோரியதாகவும், இதனை மக்களால் ஏற்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு அவர்கள் ஏ பிரிவா பீ பிரிவா என்பது முக்கியமில்லை. எல்லோரும் ஒரே மாதிரியாக தான் நடத்தப்படுவார்கள் என அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வசதிகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...