4 37
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அநுரவுக்கு உதவ முன்வந்துள்ள அரசியல்வாதி

Share

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அநுரவுக்கு உதவ முன்வந்துள்ள அரசியல்வாதி

உகண்டாவில் பணம் பதுக்கப்படாவிடினும், நாட்டை விட்டு வெளியேற்றிய பணம் பற்றி எமக்கு தெரியும் என்று சர்வஜன சக்தி கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இப்போது எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒரு திட்டமில்லாமல் ஜனாதிபதியாக இருப்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்.

அநுரகுமாரவுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம், நாங்கள் எதிர்க்கட்சிக்கு வருகிறோம், நீங்கள் உங்கள் அரசாங்கத்தை அமையுங்கள், நாங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவோம்.

இப்போது அரசு ஊழியர்களின் சம்பளம் 6 மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். அதற்கு நாங்கள் உதவுகின்றோம்.

உகண்டாவில் பணம் பதுக்கப்படாவிடினும், நாட்டை விட்டு வெளியேற்றிய பணம் பற்றி எமக்கு தெரியும். அவற்றை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் என்ன? அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் என்ன, ஆணைக்குழுக்கள் எவ்வாறு நிறுவப்படுகின்றன? இது எங்கள் திட்டத்தில் உள்ளது. இழந்த செல்வத்தை மீட்டெடுக்கும் பணியை அநுரகுமாரவால் செய்ய முடியும்.

சஜித் பிரேமதாசவை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக்க எந்த காரணமும் இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவரானால், எதுவும் செய்வதற்கில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் தேவையற்றவர் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...