3 30
இலங்கைசெய்திகள்

அநுரவின் ஆட்சிக்கு ஆபத்தாகும் மூன்று நாடுகள்

Share

அநுரவின் ஆட்சிக்கு ஆபத்தாகும் மூன்று நாடுகள்

மனித உரிமை மீறல்கள் விடயத்தில் இலங்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படுமாயின் அது பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களின் வழக்குகளில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் காரணமாக பல பேரின் வழக்குகளில் ஆழமான விசாரணைகளை முன்னெடுக்காது, ஆதாரங்களை சரியாக பரிசீலிக்காமையினால் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் போலியான எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது மிக இலகுவாக பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரித்தானியாவினை பொறுத்தமட்டில் ஏனைய நாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை விடயத்தில் இதுவரை அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்காலத்தில் இலங்கையர்கள் பலர் நாடு கடத்தப்படும் பட்சத்தில் அநுரவின் ஆட்சிக்கு அவை ஆபத்தாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...