3 30
இலங்கைசெய்திகள்

அநுரவின் ஆட்சிக்கு ஆபத்தாகும் மூன்று நாடுகள்

Share

அநுரவின் ஆட்சிக்கு ஆபத்தாகும் மூன்று நாடுகள்

மனித உரிமை மீறல்கள் விடயத்தில் இலங்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படுமாயின் அது பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களின் வழக்குகளில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் காரணமாக பல பேரின் வழக்குகளில் ஆழமான விசாரணைகளை முன்னெடுக்காது, ஆதாரங்களை சரியாக பரிசீலிக்காமையினால் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் போலியான எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது மிக இலகுவாக பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரித்தானியாவினை பொறுத்தமட்டில் ஏனைய நாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை விடயத்தில் இதுவரை அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்காலத்தில் இலங்கையர்கள் பலர் நாடு கடத்தப்படும் பட்சத்தில் அநுரவின் ஆட்சிக்கு அவை ஆபத்தாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

Screenshot 2025 11 20 174232
செய்திகள்அரசியல்இலங்கை

‘போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசைதிருப்பப்படாது; எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது’ – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளிப்பு!

போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசை திருப்பப்படாது என்றும், எதிர்க்கட்சிகளின் முயற்சிகளால் அதை ஒருபோதும் தடுக்க...

25 691c5875429c2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் இந்திய வம்சாவளிச் செல்வந்தர்கள்: வரிச் சுமை அதிகரிப்பால் துபாய், இந்தியாவுக்குப் பயணம்!

பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளிச் செல்வந்தர்கள் பலர், அங்குள்ள வரிச் சுமை அதிகரிப்பு மற்றும் கொள்கை...

p 2 91443317 sothebys golden toilet
செய்திகள்உலகம்

18 கரட் தங்கக் கழிப்பறை $12.1 மில்லியனுக்கு ஏலம்: சர்ச்சைக்குரிய கலைஞரின் ‘அமெரிக்கா’ சிற்பம் சாதனை விலை!

இத்தாலியக் கலைஞரான மௌரிசியோ கட்டேலன் (Maurizio Cattelan) உருவாக்கிய, 18 கரட் தங்கத்தாலான, முழுமையாகச் செயல்படும்...