28 11
இலங்கைசெய்திகள்

வரி செலுத்தாமல் மறைக்கப்பட்ட சொகுசு வாகனம்: பெரும் சிக்கலில் ரோஹித

Share

வரி செலுத்தாமல் மறைக்கப்பட்ட சொகுசு வாகனம்: பெரும் சிக்கலில் ரோஹித

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத சொகுசு பி.எம்.டபில்யு கார் ஒன்றும், மற்றும் மிட்சுபிஷி ஜீப் ஒன்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய முறைப்பாட்டிற்கு அமைய குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பி.எம்.டபில்யு காரின் பெறுமதி ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இரண்டு கார்களையும் வரி செலுத்தாமல் துறைமுகத்தில் இருந்து இரகசியமாக எடுத்துச் சென்று தனது மருமகன் வீட்டில் மறைத்து வைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அருப்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு வாகனங்கள் மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பின்னர், இரண்டு சொகுசு வாகனங்களைத் கைப்பற்றிய நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரிடம் எவ்வித ஆவணங்களும் சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...